Pages

Sunday, February 19, 2012

முகநூலும் மக்கள் மேலாண்மையும்

Caution: இதை விவரமாக எழுதினால் ஒரு புத்தகம் எழுதலாம், இரு பதிவில் மிக சுருக்கமாக எழுத முயற்சித்திருக்கிறேன்

மேலாண்மை என்பதற்கு "காதல்" போல, "கற்பு" போல, "பகுத்தறிவு" போல, ஒவ்வொருவரும் ஒரு விதமான அர்த்தம் கற்பிக்கிறார்கள், வரையறை வைத்திருக்கிறார்கள்.

வெற்றி பெற்றவன் சொல்லவதே சிறந்த மேலாண்மைத் தத்துவமாகிறது, அவரே பின்னர் தோற்றுவிட்டாலும் கூட இடைக்காலத்தில் அந்த தத்துவம் சிறந்த மேலாண்மைத் தத்துவமாக வலம் வந்து பலருக்கு (தவறான?) வழிகாட்டியிருக்கலாம்.

மேலாண்மை என்பது என்னைப் பொறுத்தவரை கற்றுக்கொடுக்கக் கூடியது, பயிற்றுவிக்க கூடியது, பழக்கக்கூடியது, விருப்பம் மட்டுமே தேவையானது. மேலாண்மையை கைக்கொள்ள விரும்பும் எவருக்கும் அதை நாம் அவரின் வாழ்க்கை முறையாக்கவும் முடியும்.

எந்த பேருந்தில் எப்போது ஏறுவது, எந்த உணவகத்தில் எப்போது என்ன உணவு உண்பது என்பதிலிருந்து எல்லாவற்றிலும் நாம் எல்லோரும் ஒரு மேலாளர் போல தான் செயல் படுகிறோம். அதிலிருந்து விரும்பிய விளைவைப் பெற முடிந்தால் ( வெற்றிகரமான) மேலாளர், பெறவில்லை என்றால் மேலாளர் இல்லை. முடிவுகள் சரியானதா இல்லையா என்பதை விளைவுகள் தான் தெரிவிக்கின்றன.  எத்தனை புயல்களை கடந்தோம் என்பது முக்கியமல்ல, கரை சேர்ந்தோமா என்பதே முக்கியம். மேலாளருக்கு பேச்சிலோ, செயலிலோ அல்லது இரண்டிலுமோ திறமை இருக்கலாம், விரும்பிய விளைவை பெற‌ முடிந்தால் போதுமானது.

முக‌னூல், ஒருவருக்கு மனிதர்களை மேலாண் செய்யும் திறமையை புதியதாய் அறிமுகம் செய்ய, வளர்க்க, ஒருவரை, ஒவ்வொருவரையும், மேலாளர் ஆக உருவாக்குவ‌தற்கான களமாக இருப்பதாக நினைக்கிறேன்.

கருத்திடுபவர்கள், சொந்த சரக்கோ, மண்டபத்தில் யாரோ எழுதிக்கொடுத்ததோ, பொதுவில் கிடைப்பதோ, அதை எவ்விதம் அணுகுவது என்பதிலிருந்து பலவற்றை கற்றுத்தருகிறது.

(முகனூல் தரும் வாழ்வியல் தத்துவங்களை தனியாக ஒரு பதிவிட ஆசை.)


ஒரு மேலாளருக்குத்தேவையான சில விசயங்கள் (மற்றவைகள் பகுதி -2 ல்)
1. தேர்ந்தெடுத்தலும், விட்டு விலகுதலும்.
2. செய்தியை சரியான முறையில் கொண்டு சேர்த்தல்.
3. குழு உணர்வை உருவாக்கல், குழுவை உருவாக்கி வளர்த்தல்.

4. பிரச்சனைகளை, பிரச்சனையாளர்களை கையாளுதல்.

தேர்ந்தெடுத்தலும், விட்டு விலகுதலும் (HIRE AND FIRE)

புதிய நட்பு கோரிக்கை வருகையில், அவர்களின் பதிவுகளை கொண்டு, நண்பர்களை கொண்டு, அவரைப் பற்றி புரிந்து சரியான நபரை நண்பராக தேர்ந்தெடுப்பதற்கு தொடர் வாய்ப்புகள் தருவதன் மூலம் ஒரு வேலைக்கான நபரை தேர்ந்தெடுக்கத் தேவையான திறமை வளர்க்க ஒரு களமாக இருக்கிறது.  தொடர்ந்து பிரச்சனைக்குரியவராக இருப்பவரை விட்டு விலகுவதெப்படி என்பதை கற்றுத்தருகிறது.

செய்தியை சரியான முறையில் கொண்டு சேர்த்தல் (Comm. Skills)

எவ்விதம் எழுதினால் பிறரால் மதிக்கப் படும், விரும்பப்படும் என்று உணர்ந்து நோக்கம் சிதையாமல் கருத்தை வெளிப்படுத்தக் கற்றுத்தருகிறது.  Facebookல் எல்லா கருத்துகளையும் விமர்சிக்க, பாராட்ட, தவறாக புரிந்து கொள்ள பலர் இருக்கிறார்கள், அவர்களின் கருத்துரைகளில் எவற்றுக்கெல்லாம் பதிலுரை தேவையோ அதை உணர்ந்து, பதிலுரைத்து, நம் கருத்தை வெற்றிகரமாக மற்றவர்களிடம் கொண்டு செல்ல கற்றுத்தருகிறது.

குழு உணர்வை உருவாக்கல், குழுவை உருவாக்கி வளர்த்தல்
(Team spirit and Team building)

நம்முடன் இருப்பவர்கள் (Facebook நண்பர்கள்) கூறும் சில கருத்துக்களை மதித்து, (விரும்பி (like)) நாம் கருத்துரைக்கையில் ஒரு ஒத்த கருத்துடையவர்கள் எனும் குழுமனப்பாண்மையை அது உருவாக்குகிறது.  அக்குழு பல பொது நோக்க செயல்பாடுகளை நோக்கிச் பயணிக்கும் போது குழுவில் இருக்கும் ஒவ்வருவருக்கும் அதன் வெற்றி மகிழ்ச்சியளீக்கிறது.  அக்குழுவை உருவக்கியதில் ஓவ்வொருவருக்கும் பங்கிருப்பதால் ஒவ்வொருவரும் ஒரு குழுவில் பணியாற்றுவதெப்படி என்பதை அறிகிறார்கள், குழுவை உருவாக்குவதெப்படி என கற்றுக்கொள்கிறார்கள்.


பிரச்சனைகளை, பிரச்சனையாளர்களை கையாளுதல்
(Conflict-Resolution Abilities)

சிலர் நாம் என்ன கருத்திட்டாலும் அதில் சண்டையிட காத்திருப்பார்கள்.  அப்படிப் பட்டவர்களை கையாளுகையில் ஒருவருக்கு இது போன்ற சண்டைக் கோழிகளை (flamers/trolls) எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது மற்றும் அவர்களை எப்படி கையாள்வது என்பதை நமக்கு எளிதாக‌ கற்றுத்தருகிறது.

---------------------------------------------------------------------------------------------
கடுமையான விமர்சனங்கள் இனிதே வரவேற்கப்படுகின்றன‌
---------------------------------------------------------------------------------------------
அடுத்த பகுதியில்..
பொதுதளத்தில் கலந்து பழகுதல் - நாகரீம், மரியாதை முறைகள், மற்றும் பல..



 

Monday, November 7, 2011

கூடன்குளம் அணு உலை ஏன் வேண்டாம்?

எல்லா பிரச்சனைகளையும் போல இதற்கும் நாம், உண்மை என்ன என்பதை அறிந்துகொள்ளாமல் இரு தரப்பாக பிரிந்து கிடக்கிறோம்.  டீ கடைமுதல் முகநூல்(facebook) வரை இது நடைபெறுகிறது.  Media வில் உலவ விடப்படும் செய்திகளில், நம் காதில் விழும் செய்தியை
அடிப்படையாய் கொண்டு, நாம் ஒரு நிலையை எடுத்துக்கொள்கிறோம்;
பின் எதிர் நிலை எடுத்தவர் தவறு என்று வாதம் செய்கிறோம். நாமும் சரி அவரும் சரி எதிர் கருத்து என்ன, அதில் உண்மை எவ்வளவு நம் கருத்து எவ்வளவு சரி என்று நாம் ஆராய்ச்சி செய்வதில்லை, அதற்கான நேரமும் இல்லை,


ஒரு கருத்தை பல முலாம் பூசி வெளியிடுவதில் நாம் சமர்த்தர்கள். இதிலும், இது போன்ற விஞ்ஞானம் சம்பத்தப்பட்ட விசயங்களை கற்றவர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.

அணு உலை வேண்டும் என்பவர்களின் வாதம் மூன்று முக்கிய புள்ளிகளின் மேல் அமைந்துள்ளது. அது,
1. நிகழ்கால மின்சாரத் தேவைகளுக்கும், பல மடங்கு உயர இருக்கிற எதிர்கால தேவைகளுக்கும் இந்த உலை அவசியம்.
2. இந்த உலையால் மக்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாத விதமாக‌ எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.
3. இயற்கை பேரிடர்களால் பாதிக்காது
4. பல கோடி ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளது.

உலை வேண்டாம் என்பவர்களின் வாதம் அல்லது பதில் என்ன‌?

1.  மின்சாரம் தாயாரிக்க இதுதான் ஒரே வழியா அல்லது சிறந்த வழியா?
2 & 3 இத்தொழில்நுட்பத்தில் இந்தியாவை விட அதிக அனுபவம் பெற்ற நாடுகள் கூட தோல்வியை தான் தழுவியுள்ளது.


பலகோடி செலவில் தயாரிக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்படும் செயற்கைகோள்க‌ள் சில தோல்வியடைந்து கடலில் வீழ்ந்தன.  அவைகள் தோல்வியடைந்ததற்கு விஞ்ஞானிகளின் ஏதோ ஒரு தவறு அல்லது கவனகுறைவுதான் காரணமென்பதை அவர்களே
ஒத்துக்கொள்வார்கள்.  அந்த "மனிதத் தவறு" சில நூறு கோடிகளை ரூபாய்களை மட்டும் தான் கடலில் கொட்டுகிறது, இந்த உலை பல‌  நூறு மக்களின் உயிருக்கு உலை வைத்துவிடும்.

கவனக்குறைவாய் ஓட்டி பயணிகளின் உயிர்போக காரணமாய் இருக்கும் ஒட்டுனர்களை சபிக்கிற நாம், அந்த விஞ்ஞானிகளை சபிப்பத்தில்லை ஏனென்றால் முன்னது உயிர் சம்மந்தப்பட்டது, பின்னது வெறும் பணம் சம்மந்தப்பட்டது. 

சரி பாதுகாப்பானது என்றே வைத்துக்கொள்வோம்.

புகைவண்டி, பேருந்து போன்றவற்றில் நீங்கள் எளிதில் தீப்பிடிக்கத்தக்க பொருள்களை (பெட்ரோல், மண்ணெண்ய், பட்டாசு etc) கொண்டு செல்லக்கூடாது. ஏனென்றால் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கத்தக்கது. அது பயணிகளின் "தலை மேல் தொங்கும் கத்தி"
போன்றது. இந்த விதியை ஒத்ததுதான் கூடன்குளம் மக்கள் கேட்பதும்.  ஒருவேளை அந்த பயணி (எப்போதும் 100% கவனத்தோடு தவறின்றி வேலை பார்க்கும் திறமையுடைய அணு உலை விஞ்ஞானியே ஆனாலும்)  நான் இதை அதிக‌ பட்ச பாதுகாப்போடு தான் கொண்டு வருகிறேன் என்றால் அரசு ஒத்துக்கொள்ளுமா?  அரசின் பதில் பொதுமக்களின் நலனுக்கு ஆபத்து விளைவிக்கதக்க
செயலை செய்யாதீர்கள் என்று தான் சொல்லும். அதுதான் கூடன்குளம் மக்கள் கேட்பதும்.  அப்படிபட்ட பொருளை வேறு ஊருக்கு எடுத்தச் செல்ல வேண்டுமானால் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்காத பாதுகாப்பான வேறு தனியார் வாகனத்தில் எடுத்துசெல்லத்தான்
அரசு அறிவுறுத்தும். அதை போல் அரசும் மின்சாரத்தை வேறு வழியில் தயாரிக்கலாமே.

அரசுகள் திட்டமிட்டு மின்சார தட்டுபாட்டை உருவாக்குகிறார்கள், நிலக்கரி கையிருப்பு இல்லை என்கிறார்கள்.  மற்றப்பகுதியில் வாழ்ந்து கொண்டு மின்சாரத்தேவைக்காக இது செய்துதான் ஆகவேண்டும் என்பவர்கள் தங்கள் பாதுகாப்புக்கு பங்கம் இல்லை என்பதால்தான் சொல்வதாக நினைக்க வேண்டியிருக்கிறது.

கல்பாக்கம் உள்ளிட்ட  பல உலை உள்ள இடங்களில் மக்கள் வாழத்தானே செய்கிறார்களே என்றால் காஷ்மீரில் கூட மக்கள் வாழ்கிறார்கள் நம் சகோதர இந்தியர்கள், தமிழ்நாட்டையும் அதே நிலைக்கு கொண்டு செல்லலாமா? உயிர் வாழ்வ‌தற்கு உத்திரவாதமுள்ள தமிழ்நாட்டை போல ஆக வேண்டும் என்று காஷ்மீர் நினைக்கவேண்டுமே அன்றி,  நாம் காஷ்மீர் போல் ஆக ஆசை படக்கூடாது

இந்த உலை ராஜிவ் கால‌த்தில் போடப்பட்ட ஒப்பந்ததின் அடிப்படையில் தான் எழுந்துள்ளது, அதன் பிறகு, காலம் மாறிவிட்டது, எல்லோருக்கும் அறிவு வளர்ந்திருக்கிறது.  முக்கியமாக கடந்தகாலங்களில், இந்தியாவில் இது போன்ற பிரச்சனை தரதக்க
தொழிற்சாலைகளால் அப்பகுதி மக்கள் பட்ட/ படும் துன்பங்களை அறிந்தபின், கூடன்குளம் மக்கள் ஆதரித்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.  அவர்களும், மணலியிலும், தூத்துக்குடியிலும், இன்னும் பிற இடங்களின் மக்கள் படும் அவஸ்தைகளையும் அறிவார்கள்.
போபால் முதல் ஃபுகுசிமா வரை வரலாறும் அவர்களுக்கும் தெரியும்தானே.

இன்று Mr. கலாம் அறிவித்துள்ள 10 அம்ச திட்டம், மக்களை இலவசம் தந்து ஓட்டு கேட்கும் அரசியல்வியாதிகளின் நீட்சியாகத்தான் கருத வேண்டி இருக்கிறது


You Too Kalaam sir?

Thursday, November 3, 2011

7ம் அறிவு படம் ஒரு பாடம்

பலமுறை பலவாறாக விமரிசிக்கப்பட்ட 7ம் அறிவு பற்றிய என் விமர்சனம் அல்லது கருத்துக்கள்.

எடுத்துக்கொள்ளப்பட்ட விசயம்(போதிதர்மர்) அற்புதமானது. அதை எடுத்த விதம் (making) தான் அனைவரின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

படம் பார்க்கலாமா? கண்டிப்பாக பார்க்க வேண்டும். (read last paragraph to know why)

த‌ம் முன்னோர்களின் பெருமையை அறிய எந்த சமூகமும் ஆசைப்படும். நாமும் தான். ஆனால் தமிழர் என்றொரு இனமுண்டு அவர்க்கு தனியே ஒரு குணமுண்டு. அது, நான் நினைக்கிறேன் தம்மை தாமே தாழ்த்தி மகிழ்வது, அடுத்த நிலைக்கு செல்ல முயற்சி செய்பவர்களை காலை பிடித்து இழுத்து கீழேதள்ளி "நான் அப்பவே சொன்னேன்" என்று எள்ளி நகையாடுவது. இதைத்தான் பெரும்பாலான விமர்சனங்கள் நிருபிகின்றன.

படத்தில் ஒரு (message) செய்தி சொல்ல வேண்டும் என்று பல இயக்குனர்கள் ஆசைப்படுவர். இது ஒரு வரலாற்று செய்தியை(fact) கற்பனை கலந்து சொல்ல முயன்ற திரைப்படம். இம்முயற்சி வரவேற்கப்பட வேண்டியது. நிகழ்கால கதைகளங்கள், நிகழ்வுகள் மேல் புனையப்பட்ட கதைகள் தமிழ் திரைஉலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், கடந்தகால அல்லது எதிர்கால நிகழ்வு/களம் பற்றிய திரைப்படங்கள் தமிழ் திரைஉலகில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று.

இவ்விதமான படங்கள் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டால் இங்கு ரசிக்க ஆள் உண்டு, மொழிமாற்றம் செய்யப்பட்டால் கூட இங்கு எடுபடுவதில்லை.

எம் ஜி அர், Sivaji காலத்திற்கு பின் இவ்விதமான கதைகளை எடுக்க சரியான இயக்குனர்கள் இல்லை, இக்காலத்தில் இது எடுபடாது என்று அனைவரும் நினைப்பது தான் முக்கிய காரணம். எனவேதான் இந்த படமும் நிகழ்கால படமாக எடுக்க தகுந்த கதையாக உருமாற்றியுள்ளனர்.

போதி தர்மர், எப்படி வளர்ந்தார், அவரின் காலத்தில் எப்படி மக்கள் வாழ்ந்தார்கள், அன்று யார் அவருக்கு எதிரி அவரை எப்படி இவர் வென்றார் என்று படமெடுத்தால் இயக்குனருக்கும், கதாநாயக நடிகருக்கும், பேர் கிடைக்கும், விருது கூட கிடைக்கலாம், தயாரிப்பாளருக்கு கோவணம் கூட மிஞ்சாது. எனவே நிகழ்கால கதையாய் எடுத்தது நியாயமானது அல்லது தவறில்லை

போதி தர்மர் தமிழர் என்பது அல்ல படத்தின் முக்கிய புள்ளி, பெரும்பாண்மை தமிழர்கள் அதை அறியவில்லை என்பதே படத்தின் முக்கிய புள்ளி. இந்த புள்ளியை எப்படி தவறாக கையாண்டிருக்கிறார்கள் என்பதை காண்போம்.

ஒரு ஆச்சர்யமான விசயத்தை சொல்லி அதை வைத்து அப்படியே மக்களை மயக்கிவிடுது தப்பில்லை ஆனல் இது ஆச்சர்யமான விசயம் என்பதே போதும் படம் வெற்றி பெற்று விடும் என்று இவர்கள் மயங்கி விட்டார்கள். ஒரு அற்புதமான விசயம் படம் எடுக்க கிடைத்தால் அது வெற்றியை மாபெரும் வெற்றியாக்கும், ஆனால் முதலில் வெற்றி பெற தேவையான விசயங்கள் செய்யாவிட்டால் படுதோல்வியைத்தான் தரும். இந்த தவறைத்தான் இவர்கள் செய்திருக்கிறார்கள். இதுதான் ஒருவரி கதை, சூர்யா கதாநாயகன், இவர் தயாரிப்பாளர் என்று வேறு யாரிடமோ படத்தை ஒப்படைத்து இயக்க சொல்லிவிட்டாரோ முருகதாஸ் என நினைக்கத்தோன்றுகிறது. படம் பலர் இயக்கிய படம்போலுள்ளது. ஒரு தேர்ந்த இயக்குனரின் படம் என நம்ப மனம் வரவில்லை.


இதில் நகைச்சுவை நடிகர் இல்லை ஏனென்றால் இயக்குனர், கதை, திரைக்கதையை விட நகைச்சுவை வேறு தேவை யில்லை என முடிவெடுதிருப்பார் போல.

அந்த நகைச்சுவையை பார்ப்போம். இந்தியா, சீனாவிடம் "நீங்க என்ன சொன்னாலும் செய்ரொம்"ன்னு நிக்கவைக்க, இந்தியாவில் உள்ள ஒரு நாய்க்கு ஒரு ஊசி போடனும், தவிர ஒரு கல்லூரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவியை கொல்லவேண்டும். (oh my god) ஒரு நாட்டிற்க்கு இது எல்லாம் ஒரு கொசுவை அடிக்கிற அளவு சிறிய வேலை. அதை செய்ய ஏன் ஒரு நோக்கு வர்மம் தெரிந்த நிபுணன் வரார், போன்ற கேள்விகளை 7ம் அறிவிடம் கேட்போம்

நாம்: இருப்பதில் பெரிய வேலை அந்த மருந்தை இந்தியாவிற்குள் கொண்டுவருவது தான். நாயிக்கு ஊசி போடுரது சின்ன வேலை, பெரிய வேலையை செய்ய சாமர்த்தியம் உள்ளவர், நாயிக்கு ஊசி நடுரோட்டுல வச்சிதான் போடனுமா? அதை விசாரிக்கிற போலிஸ் கிட்ட, பொய் சொல்லி, லஞ்சம் கொடுத்து தப்பிக்க முடியதா? ஏன் போலிஸை கொல்றார்?
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்:சரி ஊசியை ஏன் இவனே போடுறான், 300 கோடி வாங்கினவன் செய்யலை?
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்: சரி ஒரு veterinary மருத்துவரை நோக்கு வர்மத்தால் வசப்படுத்தினால் பல நூரு நாயிக்கு போடலாமே
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்:சரி நாய்க்கான ஊசி மருந்தில் இதை கலந்தால் பல ஊர்களில் ஒரே நேரத்தில் நோயை பரப்பலாமே
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்:சரி நாயிக்கு ஊசி போட போலிஸ்காரர் பலரை வில்லன் கொன்றானே அதன் பின் அரசு என்ன‌ செய்கிறது?
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,

நாம்:........:(

நாம்:அந்த வில்லன் நோக்கு வர்மத்தால் சாலையில் செல்லும் அத்தனை பேரையும் தூண்டி இவர்களை கொல்ல முயர்சிக்கிறான், ஆனால் பின்னர் ஆராய்ச்சிக்குதேவையானதை வெளியிலிருந்து செய்து தரும் மாலதியை பிடித்தபின் அவளை நோக்கு வர்மத்தால் கட்டுப்படுத்தி மற்றவர்களை வெளியே வரவைத்து சுட்டுக்கொல்ல செய்யலாம், அல்லது இம்ரான் என்பவனை பிடித்தபின் அவன் தானே நடந்து சென்று கார்களின் மீது மோதி இறக்கிறான், பதிலாக அவனை வைத்து மற்றவர்களை கொன்றிருக்கலாம். ஏன் செய்யவில்லை?

7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்:சரி, வில்லன் பற்றி அறியும்முன்னெ கதாநாயகி, கதாநாயகனை 1 வருடமாய் தேடி வருகிறாள், வில்லன் வந்திருக்காவிட்டால், அந்த ஆராய்சி என்ன ஆகிருக்கும், எதை சாதிப்பதர்கான ஆரய்ச்சி, உதாரணமாக AIDS க்கு மருந்து இப்படி எதாவது ஒன்று இருக்கவேண்டுமல்லவா அது என்ன?
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,

here, let us stop asking 7th sense


இப்படிபட்ட மோசமான கதை ஒரு மோசமான மசாலா படத்தில் கூட இருக்காது

ஒரு பிரம்மாண்ட படம் எப்படி எடுக்கப்படக்கூடாது என்பதற்கான பாடம் இது

தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாய் செய்தவர்கள் முறையே, தயாரிப்பாளர், கதாநாயகன், இசைஅமைப்பாளர். மற்றவர்கள் தூங்கிவிட்டார்கள், காமிராவும், வசனமும் சில இடங்களில் சொல்லிக்கொள்ளும்படி இருக்கிறது அவ்ளோ தான்

திரைக்கதைப்படி, நாயகிதான் படத்தை தோளில் தூக்கிச்செல்லவேண்டும், எந்த விதத்திலும் பொருந்தாத ஒருவரை நாயகியாக தேர்வு செய்ததின் மர்மம் என்னவோ, பிறப்பால் தமிழர் என்பதை தவிர; அவரின் உச்சரிப்பை அவர் தமிழர் இல்லை என்றால் மன்னித்திருக்கலாம் ( " ...மேல வேல் படக்கூடாது" = வெயில் படக்கூடாது" என்று அறிவீராக).   நடிப்பு?  கிலோ என்ன விலை ரகம்தான். நடிகையை நாயகியாக நிலை நிறுத்தும் வேலையை திரைக்கதை செய்யத்தவறி விட்டது


உண்மையில் படத்தில் நடிகர் சூர்யா தான் படத்தை தோளில் தனி ஒருவராய் சுமந்து செல்கிறார். அவர் ஒரு சில இடங்களில் ஆங்கிலம் படிக்காதவர் போலவும், சில இடங்களில் ஆங்கிலம் அருமையாய் பேசுகிறவராகவும் காட்டுவது மிக அபத்தம்.

இதுபோன்ற விசயங்கள், இது பல சமையற்காரர்களால் கெடுக்கப்பட்ட சாப்பாடு என சந்தேகத்தைக் கிளப்புகிறது, ஒருவர் அருமையாய், "மாதங்களில் அவள் மார்கழி" என்று கொண்டு போகிறார், அடுத்தவர், "சாதங்களில் அவள் தயிர்சாதம்" என சொதப்புகிறார்.

மொத்தத்தில், போதிதர்மர் என 5 STAR HOTEL LABEL ஒட்டப்பட்ட சாப்பாடு பார்சல் உள்ளே, நாளான, கெட்டுப்போன எலுமிச்சை சாதம்.

என்றாலும், அன்னா ஹசாரே, சரியானவரோ, தப்பானவரோ, அவரின் செய்கைகள் ஊழல் எதிர்ப்பு பற்றி அனைவரையும், சிந்திக்க, பேச வைத்தது, அது போல் இப்படமும் தமிழ‌ர்கள் தங்கள் பாரம்பரிய பெருமை பற்றி உணர, சிந்திக்க ஒரு காரணமாய் அமைந்துள்ளதால் இப்படத்தை பாருங்கள்.

Sunday, September 4, 2011

ஒழிக்கப்படவேண்டியது மரண தண்டனையா?

மரண தண்டனையை ஒழிக்க கனிமொழி உள்பட பலர் கடந்த சில காலமாக குரல் கொடுத்து வந்தாலும், பல நாடுகளில் அது ஒழிக்கப்பட்டு விட்டது என்றாலும், இந்தியாவில் அது இப்போது விவாதப் பொருளாயிருக்கிறது. காரணம், முன்பு அப்சல் குரு, கசாப், இப்போது பேரறிவாளன் உள்ளிட்ட ராஜிவ் கொலை குற்றவாளிகள்.

{ஒரு ச‌மூக‌த்தை எப்ப‌டி க‌ட்டுகோப்பாய் கொண்டுசெல்வ‌து என்ப‌தை இஸ்லாமும், இஸ்லாமிய‌ நாடுக‌ளும் வ‌ழிகாட்டுகின்ற‌ன‌. ச‌வுதி அரேபியா போன்ற‌ நாடுக‌ளில் தூக்குத்த‌ண்ட‌னை இன்னும் வ‌ழ‌க்க‌த்தில் உள்ள‌து. நேரமும் ஆர்வமும் இருந்தால் ...
http://en.wikipedia.org/wiki/Crime_in_Saudi_Arabia
http://www.nationmaster.com/country/sa-saudi-arabia/cri-crime
http://www.nationmaster.com/compare/India/Saudi-Arabia/Crime
}

பொதுமக்களில் உணர்ச்சியோடு எப்போதும் விளையாடும் சிலர், இவர்கள் அனைவரின் தூக்குத் தண்டனையை இன உணர்ச்சியோடு இணைத்து விளையாடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒரு குற்றவாளி இன்ன ஜாதி, இன்ன மதம், இன்ன இனம் என்று அந்த இனமக்கள் திரண்டு அவர்களுக்கான தண்டனையை மாற்ற‌ முயன்றால், நாட்டில் தினமும் இதுபோல் சில போராட்டங்கள் நடைபெறும். பின்பு அது நீதிமன்றத்தின் மீதான‌ நம்பிக்கையை குலைக்கும், அதன் தொடர்ச்சி அழிவை நோக்கியதாகவே முடியும்.

நம் நாட்டில் கசாப் பிடிபட்ட உடன் அவனை தூக்கிலிடவேண்டும் என்ற குரல் உயர் உணர்ச்சி வேகத்தில் ஒலித்தது. ஆனாலும் அவருக்கு ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு அவர் தரப்பு என்னவென்று கேட்டுதான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு கொடும்செயல் நிகழ்ந்த இடத்தில், அக்கொடும்செயலை நிறைவேற்றிய ஒருவன், அவ்விடத்திலேயே வைத்து பிடிக்கப்பட்டபோதும் அவனுக்கு இத்தனை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

நீதி பெறுவதற்கான வழிமுறைகள் நமது நாட்டில் சிறப்பாக இருக்கையில், ஒருவர் நீதிமன்றத் தீர்ப்பின் பிறகு இனவெழுச்சியை தூண்டி விடுதலை பெறுவது முறையாகாது. அதற்கு துணை போவது தவறு.

அரசியல்வாதிகள் தங்கள் கைது முதல் ஒவ்வொரு பிரச்சனைக்கும் யாரோ சில அப்பாவிகள் தற்கொலையை ப‌ய‌ன்ப‌டுத்துகிறார்க‌ள். ஒருவ‌ர் த‌ண்ட‌னையை மாற்ற‌ வேறு ஒருவ‌ர் த‌ற்கொலை செய்வ‌து விந்தையான‌து. இவ‌ர்க‌ள் ஒரு உயிரின் ம‌திப்பை அறிய‌வில்லை என்று தான் தோன்றுகிற‌து. எந்த‌ அர‌சிய‌ல்வாதியும், த‌னக்கு (அர‌சிய‌ல் அல்ல‌து ப‌ண) லாப‌மில்லா‌த‌ ஒரு போராட்ட‌த்தில் ஈடுப‌டுவ‌தில்லை. போராட்ட‌த்தின் அளவு அந்த‌ லாப‌த்தை பொருத்த‌து என்ப‌து அனைவ‌ரும் அறிந்த‌து.


க‌னிமொழி சிறைக்கு சென்றால்தான் சிறையில் பெண்க‌ள் ப‌ட‌க்கூடிய‌ அவ‌ஸ்தை ப‌ற்றி ஊட‌க‌ங்க‌ள் பேசுகின்றன‌. சிறைக்குள் ஏற்க‌னவே இருக்கும் பெண் கைதிக‌ள், அவ‌ர்க‌ள் விசார‌ணைக் கைதியோ, த‌ண்ட‌னைக் கைதியோ, அவ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னை ப‌ற்றி அத்த‌னை கால‌மும் எந்த‌ ஊட‌க‌மும் பேசாத‌து ஏன்?


இன்று எத்த‌னையோ தூக்குத்த‌ண்ட‌னை கைதிக‌ள் தூக்குக்காக‌ காத்திருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளின் குடும்பம், பிள்ளைக‌ள் ந‌டுத்தெருவில் நிற்கின்ற‌ன‌ர். இவர்க‌ளில் ப‌ல‌ர் கொலைத்திட்டமில்லாது, அந்தநேர‌ கோப‌த்தில் செய‌ல்ப‌ட்டு கொலைக் குற்றாவாளியாயிருக்கலாம். அவர்‌க‌ள் த‌ண்ட‌னை குறைப்பால் எந்த‌ அர‌சிய‌ல்வாதிக்கும் லாப‌மில்லை என‌வே இவ‌ர்க‌ள் தூக்கிலேற‌வேண்டிய‌து தான்.

இல‌ங்கை க‌ட‌ற்ப‌டையால் தின‌மும் அவ‌திப‌டும் மீன‌வ‌ர்க‌ளுக்காக‌ அடையாள‌ போராட்ட‌ங்க‌ள்தான் செய்வார்க‌ள். பிர‌ச்ச‌னை தீரும் வ‌ரை ஏன் போராடுவ‌தில்லை? த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌னிட‌ம் (மீன‌வர்) த‌லைக்கு ஒரு ஓட்டு மட்டும் தான் இருக்கிற‌து, என‌வே இல‌ங்கை க‌ட‌ற்ப்ப‌டையால் சாக‌டிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் போக‌ மீதி இருப்பவ‌ர்க‌ள் ஓட்டு போட்டால் போதும் போலும். இவர்களுக்கு, அகதிகளுக்கு கிடைக்கும் உயிர்பாதுகாப்பு கூட கிடைப்பதில்லை.


ஆக‌ இவ‌ர்க‌ளுக்கு, த‌மிழ‌ர் உயிர் ப‌ற்றிய‌ அக்க‌றையும் இல்லை, தூக்குத‌ண்ட‌னை கைதிகள் மீதும் அக்க‌றையில்லை. அக்க‌றை "அக்க‌ரை த‌ரும் ச‌ர்க்க‌ரை(ப‌ண‌ம்?)" மீது தானோ என்று ச‌ந்தேகிக்க‌த்தோன்றுகிற‌து.

Saturday, August 6, 2011

பட்ஜட் 2011 - ஆச்சர்யம் ஆனால் உண்மை! - 1

செய்தி இரண்டொழிய வேறில்லை என்றாகிவிட்டது. தமிழ்நாட்டில் இப்போது ஐய்யா செய்தி, அம்மா செய்தி என இரண்டு விதமான செய்திகள் மட்டுமே நமக்கு கிடைக்கிறது. பட்ஜட்டில் உள்ள பிளஸ் என்ன, குறை என்ன என்று ஒரு நடுநிலை செய்தியை யாரும் வெளியிடுவதில்லை. பத்திரிக்கைகளையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஜெ., அரசியலில் சிறிது பக்குவம் அடைந்துள்ளார் என பட்ஜட்டில் வரவேண்டிய வரிகளை முன்பே அறிவித்துவிட்டு இப்போது வரி இல்லா பட்ஜட் அறிவித்து நிருபித்துள்ளார். இல்லாவிட்டால் எல்லா பட்ஜட்களையும் போல வரிகளைப் பற்றி மட்டுமே அனைவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். பட்ஜட்க்கு முன் வரிகள் அறிவிப்பது பொதுவாக வரிகளின் அளவை பிரித்து பட்ஜட்க்கு முன் ஓர் அறிவிப்பும், பட்ஜட்டில் ஓர் அறிவிப்பும் செய்வார்கள். இப்போது அப்படி நடக்கவில்லை.

பட்ஜட்டில் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகளை அம்மா செய்திகள் தூக்கிப்பிடிக்கின்றன. தனியார் பள்ளிமாணவர்களுக்கு இது பொருந்துமா என தெரியவில்லை. இப்போது மாதம் இவ்வளவு ரூபாய் என்று மாணவர்கள் கையில் பணம் புரள்வது எவ்விதமான‌ விளைவை ஏற்படுத்துமென பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பணமாய் கொடுப்பது மாணவர்கள் குடும்பத்தின் பணத்தேவைக்காக படிப்பை பாதியில் விட்டு வேலைக்குச் செல்ல நேரிடும் அவலத்தை துடைக்கத்தான் ஆனால் இவ்வழி உதவுமா? காலம் தான் பதில் சொல்லவேண்டும்.


மாணவர்கள், ஏழைகள் என மக்களின் மீது கருணைப் பார்வை பார்க்க ஆரம்பித்திருக்கிறார் ஜெ. என்பதே ஆச்சர்யமான விசயம்தான். பார்க்கலாம் எத்தனை நாள்கள் என்று!

Click here to download பட்ஜட் as pdf

Monday, August 1, 2011

திமுகவை அழிக்கப் போவது யாரு?

போட்டி பலமாக உள்ளது. திமுக அமைப்பு ரீதியாக STRONGEST கட்சி- குறைந்த பட்சம் தமிழக அளவில்.  திமுக கட்டுக்கோப்பான கட்சி என கடந்த காலத்தில் பலமுறை நிருபித்திருக்கிறது. அதன் வாழ்வாதாரமான பலம், இதன் தலைவர் கருணாநிதியும், அவரின் பிராசார யுக்தியும் தான்.  தூணைத் துரும்பாகவும், பேனை பெருமாளாகவும் காட்ட வல்லவர். ஒரு விசயம் எவ்வித சாயம் பூசப்பட வேண்டும் என்பதிலும், புத்திசாலித்தனமாய் அதை எதிர்ப்பது யாராய் இருந்தாலும் (பத்திரிக்கையாளராயினும்) அவர்களின் குரலை இவர் ஏதோ ஒரு வழியில் SILENT செய்திடுவார்.  கட்சிக்குள் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் உடனே சிறை நிரப்பும் போராட்டம், தண்டவாளத்தில் தலை வைக்கிறேன்னு ஆரம்பித்து மக்களை திசை திருப்புவதில் வல்லவர்.  இப்போதுகூட செயற்குழு, பொதுக்குழுவில் அண்ணன் தம்பி விசயம் பத்திரிக்கையில் பேச ஆரம்பித்த உடன், சமச்சீர் கல்விக்காக மறியல் போர் அறிவித்தார்.  சும்மா இருக்கும் தொண்டனுக்கு வேலை வேண்டுமல்லவா?

இப்படி சகலதிறமையும் உள்ள தலைவனைக் கொண்ட கட்டுக்கோப்பான கட்சி, கலகலக்க ஆரம்பித்துவிட்டது. அதன் கட்டமைப்பில் விரிசல்கள் விழ ஆரம்பித்து விட்டது. பிரதான எதிரியான அதிமுக இதுவரை திமுகவை அழிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. ஏனென்றால் திமுக இருக்கும் வரை, அதுவும் நேர் எதிரான அரசியல் நிலைப்பாட்டை எப்போதும் எடுக்கும் திமுக இருப்பது தான் அதிமுகவிற்கு நல்லது. அதிகபட்சம் அதிமுகவின் முயற்சி, திமுகவை பலவீனமான ஒரு கட்சியாக்க முயல்வதாகத்தான் இருக்க முடியும். ஆக‌வே திமுக‌வை அழிக்க‌ முய‌லாது.

விஜ‌ய‌காந்த், ச‌ர‌ச‌ர‌ என்று வ‌ள‌ர்ந்து வ‌ரும் இவ‌ரின் வெளிப்ப‌டையான‌, முக்கியமான‌ எதிரி திமுக தான். திமுக‌வின் அழிவில் வ‌ள‌ர‌த்த‌க்க‌ ஒரு க‌ட்சி இவ‌ருடைய‌து என்றாலும், திமுக‌ முன் இவ‌ர‌து க‌ட்சி ஒரு பொடிப்ப‌ய‌லைப் போன்றது. க‌ட‌ந்த‌ தேர்த‌லில் ச‌ரியான‌ முடிவெடுத்து, திமுக‌வின் அதிக‌ப‌ட்ச‌ எதிர்ப்பை ச‌ந்தித்தார்.  தேமுதிக‌வை ப‌ற்றி விம‌ரிசிக்காம‌ல், விஜ‌ய‌காந்த் ப‌ற்றி த‌ர‌ம் தாழ்ந்து விம‌ரிசித்த‌து திமுக‌வின் ஊட‌க‌ங்க‌ள். திமுக‌வின் மிக‌ப்பெரிய‌ ப‌ல‌மான‌ திரிபுவாத‌ பிர‌ச்சார‌த்தை மீறி விஜ‌ய‌காந்த் எதிர்க‌ட்சி த‌லைவராக அமரும் விதமாய் தேமுதிக வென்றதற்கு, திரிபுவாத பிரச்சாரச் சூழ்ச்சியை மக்கள் உணர்ந்ததுதான் காரணம். என்வே திமுகவின் செல்வாக்கை குறைப்பதில் இவர் முதல் படி தாண்டிவிட்டார் என்று சொல்லலாம்.  தாவிது மற்றும் கோலியாத் கதையை நினைவுபடுத்துகிறார்.  ஆனால் திமுகவை அழிக்க இவரால் இயலாது.

வைகோ, திமுக அழிந்து அதன் தொண்டர்கள் மதிமுகவில் இணைவார்கள் என்ற கனவு இவருக்கு இருக்கலாம். கருணாநிதியே, தன்னை அழைத்து திமுகவின் தலைவராயிருந்து கட்சியை வழி நடத்துங்கள் என்று சொல்வாரென்ற அளவிற்கோ அல்லது கருணாநிதிக்குப் பின் திமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் தன்னை அழைத்து தலைமை ஏற்க சொல்வார்கள் என்றோ கூட அவர் கனவு காணலாம். அது அவர் உரிமை !  ஆனால் திமுகவை அழிக்கத் தேவையான சக்தியோ, இன்னபிறவோ இவருக்கு இல்லை.

பகையாளியை உறவாடி கெடு என்று காங்கிரஸ் இப்போது செயல்பட்டு அதில் பாதி வெற்றியையும் பெற்று விட்டது. முகவின் எதிர்காலத்தை (பிள்ளைகளை) முடக்கினால் திமுகவை முடக்கி விடலாமென திட்டமிட்டு செயல்பட்டு கனிமொழியை சிறையில் தள்ளியது. தொடர்ந்து மாறன் சகோதரர்களும் அடுத்த இலக்காகி உள்ளனர். காங்கிரஸ் திமுகவை அழிக்கும் எண்ணத்தோடு செயல்படுவது போல்தான் தெரிகிறது.  அதில் அவ‌ர்க‌ள் வெற்றி பெற்றாலும் அத‌ன் ப‌யனை இப்போது அவ‌ர்க‌ளால் அனுப‌விக்க‌ முடியாது. அந்த‌ நிலையில் த‌மிழ‌க‌ காங்கிரஸ் இல்லை. அந்த‌ நிலைக்கு வ‌ர‌ ஒரு நூற்றாண்டு தேவைப் ப‌ட‌லாம்.

இவையெல்லாவ‌ற்றையும் விட‌ ஒரு பெரிய‌ எதிரி திமுகவை அழிக்க க‌ண்மூடித்த‌ன‌மாய் வெலை செய்கிறது.... அது... உட்க‌ட்சிப் பிர‌ச்ச‌னை. த‌லைமைக்கான‌ போட்டி, அது தொட‌ர்பான‌ உள்ள‌டி வேலைக‌ள், ஆளும்க‌ட்சியாய் இருந்த காலத்தில் பிர‌ச்சனை/ஊழல் ப‌ண்ணாத‌ விச‌ய‌மே இல்லை எனும் நிலை, அத‌ன் மீதான இந்த ஆட்சியின் ச‌ட்ட‌ரீதியான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள். இவ‌ற்றிலிருந்து திமுக‌ மீளுமா இல்லை மாளுமா என‌ பொறுத்திருந்து தான் பார்க்க‌ வேண்டும்.

Thursday, July 28, 2011

எடியூரப்பா - நீஙக நல்லவரா? கெட்டவரா?

காங்கிரஸ் கட்சி முன்னெப்போதையும் விட இப்போது எதிரிகளை எளிதாக அழித்தொழிக்கிறது.  ஒருவேளை மஹாராஷ்ட்ராவில் தன் முதல்வரையே மாற்றியதே என்று யோசிக்கத் தோன்றலாம். தன் கட்சியிலேயே அவர்கள் சில பலிகளை கொடுப்பது த‌ங்களை தூய்மையானவர்கள் என்று காண்பிக்கத்தானோ என்றுதான் தோன்றுகிறது. (இந்த உலகம் இன்னுமா நம்மளை நம்புது?)

எடியூரப்பா எத்த‌னை முறை பாத்ரூம் உள்ளே போயி க‌த்தி க‌தறி அழுது கொண்டாரோ? பாவ‌ம் ம‌னித‌னுக்கு இப்பொ பிடித்த‌ த‌மிழ் பாட‌ல் "சோத‌னை மேல் சோத‌னை.. போதும‌டா சாமி.." யாக‌த்தான் இருக்கும்.  முத‌ல்வ‌ர் வேலை பார்க்க‌ அவ‌ருக்கு எப்ப‌டி நேர‌ம் கிடைக்கிற‌து என்ப‌து க‌ட‌வுளுக்குத் தான் வெளிச்ச‌ம்!

ப‌வுன்ச‌ர் மேல் ப‌வுன்ச‌ர் போட்டுகிட்டே இருக்காங்க‌, இப்போ third umpire கிட்ட‌ வேற‌ விச‌ய‌ம் போயிருக்கு. பார்க்க‌லாம் என்ன‌ ந‌ட‌க்கிற‌தென்று.

சுர‌ங்க‌ ஊழ‌லில், தோண்ட‌த் தோண்ட‌ ஏக‌ப்ப‌ட்ட‌ த‌லைக‌ள் கிடைத்துள்ள‌ன‌. எல்லாம் ச‌ரி, இந்த‌ லோக‌யுக்தா அறிக்கை ச‌ம‌ர்ப்பிக்கும் முன்பே media வில் அது கிடைக்கிற‌தே அது எப்ப‌டி? 

இந்த‌ நாட்டில் "அரச‌ ர‌க‌சிய‌ம்" என்று ஒன்றே கிடையாதா?   நாடுக‌ள், அடுத்த‌ நாடுகளின் ராணுவ‌, ம‌ற்றும் இத‌ர‌ அர‌ச‌ ர‌க‌சிய‌ங்க‌ளை அறிய‌ ஒற்ற‌ர் ப‌டை ஒன்று அனுப்பியிருப்பார்க‌ள்.  ஆனால் இந்தியாவுக்கு அது அவ‌ர்க‌ளுக்கு தேவை இல்லை?   இங்கே media கார‌ர்க‌ள் எளிதாக‌ அதை செய்யும்போது, ஒற்ற‌ர் ப‌டை எத‌ற்கு?

 லோக‌யுக்தா தலைவ‌ரிட‌ம் ஒரு நிருப‌ர் கேட்கிறார், இத்த‌னை chapter, இத்த‌னை ப‌க்க‌ம் கொண்ட‌ இந்த‌ அறிக்கையை எப்போது அர‌சிட‌ம் ச‌ம‌ர்ப்பிக்க‌ போகிறீர்க‌ள்?  அத‌ற்கு அவ‌ர், "நான் கையெழுத்திட்டு இன்று ஒப்ப‌டைப்பேன்" என்கிறார்.  நாம் இன்னும் கையெழுத்திடாத‌ ஒரு அறிக்கையின் முழு ப‌ரிமாண‌மும் ஏற்க‌ன‌வே எல்லோரும் அறிந்த‌ ர‌க‌சிய‌ம் என்ப‌தில் அவ‌ருக்கு துளியும் வ‌ருத்த‌மில்லை போலும்.  ஒருவேளை கையெழுத்திட்ட ‌அறிக்கை leakஆனால் இன்னும் கேவ‌ல‌ம் என்றுதான் கையெழுத்திடாதிருந்தாரோ?  அவ‌ருக்கே வெளிச்ச‌ம்.

எல்லாம் ச‌ரி குற்ற‌ச்சாட்டு நிருபிக்க‌ப்ப‌ட்டால் அர‌சிய‌லை விட்டு வில‌குவ‌தாக‌ எடியூரப்பா சொன்னார்.  

எடியூரப்பா அவர்களே!  இப்போ அறிக்கையில் உம்முடைய‌ பாட்டும் குற்ற‌முடைய‌துன்னு சொல்லிருக்கிற‌தே,  நீர் நல்லவரா? கெட்டவரா?