Pages

Monday, November 7, 2011

கூடன்குளம் அணு உலை ஏன் வேண்டாம்?

எல்லா பிரச்சனைகளையும் போல இதற்கும் நாம், உண்மை என்ன என்பதை அறிந்துகொள்ளாமல் இரு தரப்பாக பிரிந்து கிடக்கிறோம்.  டீ கடைமுதல் முகநூல்(facebook) வரை இது நடைபெறுகிறது.  Media வில் உலவ விடப்படும் செய்திகளில், நம் காதில் விழும் செய்தியை
அடிப்படையாய் கொண்டு, நாம் ஒரு நிலையை எடுத்துக்கொள்கிறோம்;
பின் எதிர் நிலை எடுத்தவர் தவறு என்று வாதம் செய்கிறோம். நாமும் சரி அவரும் சரி எதிர் கருத்து என்ன, அதில் உண்மை எவ்வளவு நம் கருத்து எவ்வளவு சரி என்று நாம் ஆராய்ச்சி செய்வதில்லை, அதற்கான நேரமும் இல்லை,


ஒரு கருத்தை பல முலாம் பூசி வெளியிடுவதில் நாம் சமர்த்தர்கள். இதிலும், இது போன்ற விஞ்ஞானம் சம்பத்தப்பட்ட விசயங்களை கற்றவர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.

அணு உலை வேண்டும் என்பவர்களின் வாதம் மூன்று முக்கிய புள்ளிகளின் மேல் அமைந்துள்ளது. அது,
1. நிகழ்கால மின்சாரத் தேவைகளுக்கும், பல மடங்கு உயர இருக்கிற எதிர்கால தேவைகளுக்கும் இந்த உலை அவசியம்.
2. இந்த உலையால் மக்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாத விதமாக‌ எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.
3. இயற்கை பேரிடர்களால் பாதிக்காது
4. பல கோடி ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளது.

உலை வேண்டாம் என்பவர்களின் வாதம் அல்லது பதில் என்ன‌?

1.  மின்சாரம் தாயாரிக்க இதுதான் ஒரே வழியா அல்லது சிறந்த வழியா?
2 & 3 இத்தொழில்நுட்பத்தில் இந்தியாவை விட அதிக அனுபவம் பெற்ற நாடுகள் கூட தோல்வியை தான் தழுவியுள்ளது.


பலகோடி செலவில் தயாரிக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்படும் செயற்கைகோள்க‌ள் சில தோல்வியடைந்து கடலில் வீழ்ந்தன.  அவைகள் தோல்வியடைந்ததற்கு விஞ்ஞானிகளின் ஏதோ ஒரு தவறு அல்லது கவனகுறைவுதான் காரணமென்பதை அவர்களே
ஒத்துக்கொள்வார்கள்.  அந்த "மனிதத் தவறு" சில நூறு கோடிகளை ரூபாய்களை மட்டும் தான் கடலில் கொட்டுகிறது, இந்த உலை பல‌  நூறு மக்களின் உயிருக்கு உலை வைத்துவிடும்.

கவனக்குறைவாய் ஓட்டி பயணிகளின் உயிர்போக காரணமாய் இருக்கும் ஒட்டுனர்களை சபிக்கிற நாம், அந்த விஞ்ஞானிகளை சபிப்பத்தில்லை ஏனென்றால் முன்னது உயிர் சம்மந்தப்பட்டது, பின்னது வெறும் பணம் சம்மந்தப்பட்டது. 

சரி பாதுகாப்பானது என்றே வைத்துக்கொள்வோம்.

புகைவண்டி, பேருந்து போன்றவற்றில் நீங்கள் எளிதில் தீப்பிடிக்கத்தக்க பொருள்களை (பெட்ரோல், மண்ணெண்ய், பட்டாசு etc) கொண்டு செல்லக்கூடாது. ஏனென்றால் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கத்தக்கது. அது பயணிகளின் "தலை மேல் தொங்கும் கத்தி"
போன்றது. இந்த விதியை ஒத்ததுதான் கூடன்குளம் மக்கள் கேட்பதும்.  ஒருவேளை அந்த பயணி (எப்போதும் 100% கவனத்தோடு தவறின்றி வேலை பார்க்கும் திறமையுடைய அணு உலை விஞ்ஞானியே ஆனாலும்)  நான் இதை அதிக‌ பட்ச பாதுகாப்போடு தான் கொண்டு வருகிறேன் என்றால் அரசு ஒத்துக்கொள்ளுமா?  அரசின் பதில் பொதுமக்களின் நலனுக்கு ஆபத்து விளைவிக்கதக்க
செயலை செய்யாதீர்கள் என்று தான் சொல்லும். அதுதான் கூடன்குளம் மக்கள் கேட்பதும்.  அப்படிபட்ட பொருளை வேறு ஊருக்கு எடுத்தச் செல்ல வேண்டுமானால் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்காத பாதுகாப்பான வேறு தனியார் வாகனத்தில் எடுத்துசெல்லத்தான்
அரசு அறிவுறுத்தும். அதை போல் அரசும் மின்சாரத்தை வேறு வழியில் தயாரிக்கலாமே.

அரசுகள் திட்டமிட்டு மின்சார தட்டுபாட்டை உருவாக்குகிறார்கள், நிலக்கரி கையிருப்பு இல்லை என்கிறார்கள்.  மற்றப்பகுதியில் வாழ்ந்து கொண்டு மின்சாரத்தேவைக்காக இது செய்துதான் ஆகவேண்டும் என்பவர்கள் தங்கள் பாதுகாப்புக்கு பங்கம் இல்லை என்பதால்தான் சொல்வதாக நினைக்க வேண்டியிருக்கிறது.

கல்பாக்கம் உள்ளிட்ட  பல உலை உள்ள இடங்களில் மக்கள் வாழத்தானே செய்கிறார்களே என்றால் காஷ்மீரில் கூட மக்கள் வாழ்கிறார்கள் நம் சகோதர இந்தியர்கள், தமிழ்நாட்டையும் அதே நிலைக்கு கொண்டு செல்லலாமா? உயிர் வாழ்வ‌தற்கு உத்திரவாதமுள்ள தமிழ்நாட்டை போல ஆக வேண்டும் என்று காஷ்மீர் நினைக்கவேண்டுமே அன்றி,  நாம் காஷ்மீர் போல் ஆக ஆசை படக்கூடாது

இந்த உலை ராஜிவ் கால‌த்தில் போடப்பட்ட ஒப்பந்ததின் அடிப்படையில் தான் எழுந்துள்ளது, அதன் பிறகு, காலம் மாறிவிட்டது, எல்லோருக்கும் அறிவு வளர்ந்திருக்கிறது.  முக்கியமாக கடந்தகாலங்களில், இந்தியாவில் இது போன்ற பிரச்சனை தரதக்க
தொழிற்சாலைகளால் அப்பகுதி மக்கள் பட்ட/ படும் துன்பங்களை அறிந்தபின், கூடன்குளம் மக்கள் ஆதரித்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.  அவர்களும், மணலியிலும், தூத்துக்குடியிலும், இன்னும் பிற இடங்களின் மக்கள் படும் அவஸ்தைகளையும் அறிவார்கள்.
போபால் முதல் ஃபுகுசிமா வரை வரலாறும் அவர்களுக்கும் தெரியும்தானே.

இன்று Mr. கலாம் அறிவித்துள்ள 10 அம்ச திட்டம், மக்களை இலவசம் தந்து ஓட்டு கேட்கும் அரசியல்வியாதிகளின் நீட்சியாகத்தான் கருத வேண்டி இருக்கிறது


You Too Kalaam sir?

Thursday, November 3, 2011

7ம் அறிவு படம் ஒரு பாடம்

பலமுறை பலவாறாக விமரிசிக்கப்பட்ட 7ம் அறிவு பற்றிய என் விமர்சனம் அல்லது கருத்துக்கள்.

எடுத்துக்கொள்ளப்பட்ட விசயம்(போதிதர்மர்) அற்புதமானது. அதை எடுத்த விதம் (making) தான் அனைவரின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

படம் பார்க்கலாமா? கண்டிப்பாக பார்க்க வேண்டும். (read last paragraph to know why)

த‌ம் முன்னோர்களின் பெருமையை அறிய எந்த சமூகமும் ஆசைப்படும். நாமும் தான். ஆனால் தமிழர் என்றொரு இனமுண்டு அவர்க்கு தனியே ஒரு குணமுண்டு. அது, நான் நினைக்கிறேன் தம்மை தாமே தாழ்த்தி மகிழ்வது, அடுத்த நிலைக்கு செல்ல முயற்சி செய்பவர்களை காலை பிடித்து இழுத்து கீழேதள்ளி "நான் அப்பவே சொன்னேன்" என்று எள்ளி நகையாடுவது. இதைத்தான் பெரும்பாலான விமர்சனங்கள் நிருபிகின்றன.

படத்தில் ஒரு (message) செய்தி சொல்ல வேண்டும் என்று பல இயக்குனர்கள் ஆசைப்படுவர். இது ஒரு வரலாற்று செய்தியை(fact) கற்பனை கலந்து சொல்ல முயன்ற திரைப்படம். இம்முயற்சி வரவேற்கப்பட வேண்டியது. நிகழ்கால கதைகளங்கள், நிகழ்வுகள் மேல் புனையப்பட்ட கதைகள் தமிழ் திரைஉலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், கடந்தகால அல்லது எதிர்கால நிகழ்வு/களம் பற்றிய திரைப்படங்கள் தமிழ் திரைஉலகில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று.

இவ்விதமான படங்கள் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டால் இங்கு ரசிக்க ஆள் உண்டு, மொழிமாற்றம் செய்யப்பட்டால் கூட இங்கு எடுபடுவதில்லை.

எம் ஜி அர், Sivaji காலத்திற்கு பின் இவ்விதமான கதைகளை எடுக்க சரியான இயக்குனர்கள் இல்லை, இக்காலத்தில் இது எடுபடாது என்று அனைவரும் நினைப்பது தான் முக்கிய காரணம். எனவேதான் இந்த படமும் நிகழ்கால படமாக எடுக்க தகுந்த கதையாக உருமாற்றியுள்ளனர்.

போதி தர்மர், எப்படி வளர்ந்தார், அவரின் காலத்தில் எப்படி மக்கள் வாழ்ந்தார்கள், அன்று யார் அவருக்கு எதிரி அவரை எப்படி இவர் வென்றார் என்று படமெடுத்தால் இயக்குனருக்கும், கதாநாயக நடிகருக்கும், பேர் கிடைக்கும், விருது கூட கிடைக்கலாம், தயாரிப்பாளருக்கு கோவணம் கூட மிஞ்சாது. எனவே நிகழ்கால கதையாய் எடுத்தது நியாயமானது அல்லது தவறில்லை

போதி தர்மர் தமிழர் என்பது அல்ல படத்தின் முக்கிய புள்ளி, பெரும்பாண்மை தமிழர்கள் அதை அறியவில்லை என்பதே படத்தின் முக்கிய புள்ளி. இந்த புள்ளியை எப்படி தவறாக கையாண்டிருக்கிறார்கள் என்பதை காண்போம்.

ஒரு ஆச்சர்யமான விசயத்தை சொல்லி அதை வைத்து அப்படியே மக்களை மயக்கிவிடுது தப்பில்லை ஆனல் இது ஆச்சர்யமான விசயம் என்பதே போதும் படம் வெற்றி பெற்று விடும் என்று இவர்கள் மயங்கி விட்டார்கள். ஒரு அற்புதமான விசயம் படம் எடுக்க கிடைத்தால் அது வெற்றியை மாபெரும் வெற்றியாக்கும், ஆனால் முதலில் வெற்றி பெற தேவையான விசயங்கள் செய்யாவிட்டால் படுதோல்வியைத்தான் தரும். இந்த தவறைத்தான் இவர்கள் செய்திருக்கிறார்கள். இதுதான் ஒருவரி கதை, சூர்யா கதாநாயகன், இவர் தயாரிப்பாளர் என்று வேறு யாரிடமோ படத்தை ஒப்படைத்து இயக்க சொல்லிவிட்டாரோ முருகதாஸ் என நினைக்கத்தோன்றுகிறது. படம் பலர் இயக்கிய படம்போலுள்ளது. ஒரு தேர்ந்த இயக்குனரின் படம் என நம்ப மனம் வரவில்லை.


இதில் நகைச்சுவை நடிகர் இல்லை ஏனென்றால் இயக்குனர், கதை, திரைக்கதையை விட நகைச்சுவை வேறு தேவை யில்லை என முடிவெடுதிருப்பார் போல.

அந்த நகைச்சுவையை பார்ப்போம். இந்தியா, சீனாவிடம் "நீங்க என்ன சொன்னாலும் செய்ரொம்"ன்னு நிக்கவைக்க, இந்தியாவில் உள்ள ஒரு நாய்க்கு ஒரு ஊசி போடனும், தவிர ஒரு கல்லூரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவியை கொல்லவேண்டும். (oh my god) ஒரு நாட்டிற்க்கு இது எல்லாம் ஒரு கொசுவை அடிக்கிற அளவு சிறிய வேலை. அதை செய்ய ஏன் ஒரு நோக்கு வர்மம் தெரிந்த நிபுணன் வரார், போன்ற கேள்விகளை 7ம் அறிவிடம் கேட்போம்

நாம்: இருப்பதில் பெரிய வேலை அந்த மருந்தை இந்தியாவிற்குள் கொண்டுவருவது தான். நாயிக்கு ஊசி போடுரது சின்ன வேலை, பெரிய வேலையை செய்ய சாமர்த்தியம் உள்ளவர், நாயிக்கு ஊசி நடுரோட்டுல வச்சிதான் போடனுமா? அதை விசாரிக்கிற போலிஸ் கிட்ட, பொய் சொல்லி, லஞ்சம் கொடுத்து தப்பிக்க முடியதா? ஏன் போலிஸை கொல்றார்?
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்:சரி ஊசியை ஏன் இவனே போடுறான், 300 கோடி வாங்கினவன் செய்யலை?
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்: சரி ஒரு veterinary மருத்துவரை நோக்கு வர்மத்தால் வசப்படுத்தினால் பல நூரு நாயிக்கு போடலாமே
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்:சரி நாய்க்கான ஊசி மருந்தில் இதை கலந்தால் பல ஊர்களில் ஒரே நேரத்தில் நோயை பரப்பலாமே
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்:சரி நாயிக்கு ஊசி போட போலிஸ்காரர் பலரை வில்லன் கொன்றானே அதன் பின் அரசு என்ன‌ செய்கிறது?
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,

நாம்:........:(

நாம்:அந்த வில்லன் நோக்கு வர்மத்தால் சாலையில் செல்லும் அத்தனை பேரையும் தூண்டி இவர்களை கொல்ல முயர்சிக்கிறான், ஆனால் பின்னர் ஆராய்ச்சிக்குதேவையானதை வெளியிலிருந்து செய்து தரும் மாலதியை பிடித்தபின் அவளை நோக்கு வர்மத்தால் கட்டுப்படுத்தி மற்றவர்களை வெளியே வரவைத்து சுட்டுக்கொல்ல செய்யலாம், அல்லது இம்ரான் என்பவனை பிடித்தபின் அவன் தானே நடந்து சென்று கார்களின் மீது மோதி இறக்கிறான், பதிலாக அவனை வைத்து மற்றவர்களை கொன்றிருக்கலாம். ஏன் செய்யவில்லை?

7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்:சரி, வில்லன் பற்றி அறியும்முன்னெ கதாநாயகி, கதாநாயகனை 1 வருடமாய் தேடி வருகிறாள், வில்லன் வந்திருக்காவிட்டால், அந்த ஆராய்சி என்ன ஆகிருக்கும், எதை சாதிப்பதர்கான ஆரய்ச்சி, உதாரணமாக AIDS க்கு மருந்து இப்படி எதாவது ஒன்று இருக்கவேண்டுமல்லவா அது என்ன?
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,

here, let us stop asking 7th sense


இப்படிபட்ட மோசமான கதை ஒரு மோசமான மசாலா படத்தில் கூட இருக்காது

ஒரு பிரம்மாண்ட படம் எப்படி எடுக்கப்படக்கூடாது என்பதற்கான பாடம் இது

தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாய் செய்தவர்கள் முறையே, தயாரிப்பாளர், கதாநாயகன், இசைஅமைப்பாளர். மற்றவர்கள் தூங்கிவிட்டார்கள், காமிராவும், வசனமும் சில இடங்களில் சொல்லிக்கொள்ளும்படி இருக்கிறது அவ்ளோ தான்

திரைக்கதைப்படி, நாயகிதான் படத்தை தோளில் தூக்கிச்செல்லவேண்டும், எந்த விதத்திலும் பொருந்தாத ஒருவரை நாயகியாக தேர்வு செய்ததின் மர்மம் என்னவோ, பிறப்பால் தமிழர் என்பதை தவிர; அவரின் உச்சரிப்பை அவர் தமிழர் இல்லை என்றால் மன்னித்திருக்கலாம் ( " ...மேல வேல் படக்கூடாது" = வெயில் படக்கூடாது" என்று அறிவீராக).   நடிப்பு?  கிலோ என்ன விலை ரகம்தான். நடிகையை நாயகியாக நிலை நிறுத்தும் வேலையை திரைக்கதை செய்யத்தவறி விட்டது


உண்மையில் படத்தில் நடிகர் சூர்யா தான் படத்தை தோளில் தனி ஒருவராய் சுமந்து செல்கிறார். அவர் ஒரு சில இடங்களில் ஆங்கிலம் படிக்காதவர் போலவும், சில இடங்களில் ஆங்கிலம் அருமையாய் பேசுகிறவராகவும் காட்டுவது மிக அபத்தம்.

இதுபோன்ற விசயங்கள், இது பல சமையற்காரர்களால் கெடுக்கப்பட்ட சாப்பாடு என சந்தேகத்தைக் கிளப்புகிறது, ஒருவர் அருமையாய், "மாதங்களில் அவள் மார்கழி" என்று கொண்டு போகிறார், அடுத்தவர், "சாதங்களில் அவள் தயிர்சாதம்" என சொதப்புகிறார்.

மொத்தத்தில், போதிதர்மர் என 5 STAR HOTEL LABEL ஒட்டப்பட்ட சாப்பாடு பார்சல் உள்ளே, நாளான, கெட்டுப்போன எலுமிச்சை சாதம்.

என்றாலும், அன்னா ஹசாரே, சரியானவரோ, தப்பானவரோ, அவரின் செய்கைகள் ஊழல் எதிர்ப்பு பற்றி அனைவரையும், சிந்திக்க, பேச வைத்தது, அது போல் இப்படமும் தமிழ‌ர்கள் தங்கள் பாரம்பரிய பெருமை பற்றி உணர, சிந்திக்க ஒரு காரணமாய் அமைந்துள்ளதால் இப்படத்தை பாருங்கள்.