Pages

Saturday, January 8, 2011

கவிதை எழுதலாம் வாருங்கள்... பகுதி-அ

நான் ஒரு 1 மாத விரைவு பயிற்சி (fast track course) குடுக்கலாம்ன்னு இருக்கேன்.

(fee details#  are given at the end of this post)   (People who wish to join can post ur details in comment section)

கவிஞன் ஆகணும்ன்னா முதலில் எவ்விதமான கவிதை உங்களுக்கு நல்லா வருதுன்னு தெரிந்து கொள்ள வேண்டும். (என்னது வித விதமான கவிதைகள் இருக்கான்னு கேக்காதீங்க)

உதாரணம்: ஹைக்கூ, மரபு கவிதை, வசன கவிதை etc...

ஹைக்கூ:  இது எழுதுறதும், பிரசுரமாவதும் ரொம்ப ஈசி. ஆன பத்திரிக்கைகள்ள 50 ரூபாய் தான் சன்மானம் கொடுப்பாங்க (5 வார்த்தைக்கு 50 ரூபாய்ன்னா சும்மாவா), அது போதும்ன்னா இத முயற்சி பண்ணலாம்.
தவிர, இதை முதல் படியா நினைச்சீங்ன்னா சீக்கிரம் முன்னேறிடலாம்.

முதல்ல ஒரு பொருள் (subject)  தேர்ந்தெடுக்கனும்.  எப்படி தேர்ந்தெடுக்கனும்ன்னா, எதாவது ஒரு பழைய புத்தகத்தில் வந்த துணுக்கு, சிரிப்பு அல்லது நேத்து ராத்திரி 12' o clock க்கு வந்த மொக்கை குறுசேதி (SMS)தேர்ந்தெடுக்கனும்.   அதை வாணலியில் யிட்டு..sorry  அந்த வரிய விட்டுருங்க.

தேர்ந்தெடுத்த சிரிப்பு அல்லது செய்தியை ஒரே வரியில் 5 வார்த்தைகளுக்குள் அடங்குமாறு முதலில் எழுதவும்.   பின், கடைசி
மூன்று வார்த்தைகள் முதல் வரியில் இருக்குமாறு வரி பிரிக்க வேண்டும். (tax collection  இல்லை line  breaking )

6 வது வார்த்தை இருந்தால் என்ன பண்றதுன்னு கேட்கிறீர்களா?

.... அதை தலைப்பாக்கி விடுங்கள்.


உதாரணம்:

பெண்ணீயவாதி

பெண்விடுதலை மாநாட்டிற்கு சென்றாள்
கணவனின் அனுமதியோடு


அவ்ளோதான்
கவிதை தயார்.. நீங்கள் கவிஞர் ஆயிடீங்க‌

எழுத்தாளர் சுஜாதா உயிரோடு இல்லை எனவே யாரும் இதை ஹைக்கூ என்று சொல்வதை ஆட்சேபிக்க மாட்டார்கள். அப்படி யாராவது இது ஹைக்கூ இல்லைன்னாங்கன்னா. உங்களுக்கு சென்ரியு தெரியுமான்னு கேளுங்க, ஓடிப்போயிருவார், அதுவும் தெரிந்தவர் உங்களிடம் கேள்வியே கேட்கமாட்டார்.

பகுதி-ஆ நாளை வெளியாகும்... அதுவரை காத்திருக்கவும்

உங்கள் கவிதைகளை பின்னுட்ட‌த்தில் சிந்(து/தியு)ங்கள்

பி.கு.:

சும்மா எதுகை மோனையா பேசினாலே கவிதை கவிதைன்னு சொல்லிச் சொல்லியே சும்மா அவனவன் பேசுவ‌தை/எழுதுவ‌தையே கவிதை (கவதை??) ன்னு சொல்லிக்கிற அளவுக்கு கீ...ழே போயிட்டாங்க.

 இவங்க‌ வதை தாங்க முடியலைஙக...   அதனால தான் இந்த‌ வதை  sorry.. பதிவு !

"கவிங்கன்" (கவிஞன்) ஆக‌னும், பிரபலமாகனுங்கற வெறி நிறைய பேருக்கு பிடிச்சி ஆட்டொ ஆட்டுன்னு ஆடுட்டுது.

அவிங்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

 #Fee: 10 sacs of onion and 10 sacs of garlic.

2 comments:

  1. எதுக்கு ஒரு மாசம்.. கவிஞராவதற்கு 24 மணி நேரங்களே போதுமானது!! அது ஃபேஸ்புக் அக்கவுண்ட் துவங்கியவுடனே வந்துவிடுகிறது

    ReplyDelete