காங்கிரஸ் கட்சி முன்னெப்போதையும் விட இப்போது எதிரிகளை எளிதாக அழித்தொழிக்கிறது. ஒருவேளை மஹாராஷ்ட்ராவில் தன் முதல்வரையே மாற்றியதே என்று யோசிக்கத் தோன்றலாம். தன் கட்சியிலேயே அவர்கள் சில பலிகளை கொடுப்பது தங்களை தூய்மையானவர்கள் என்று காண்பிக்கத்தானோ என்றுதான் தோன்றுகிறது. (இந்த உலகம் இன்னுமா நம்மளை நம்புது?)
எடியூரப்பா எத்தனை முறை பாத்ரூம் உள்ளே போயி கத்தி கதறி அழுது கொண்டாரோ? பாவம் மனிதனுக்கு இப்பொ பிடித்த தமிழ் பாடல் "சோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி.." யாகத்தான் இருக்கும். முதல்வர் வேலை பார்க்க அவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம்!
பவுன்சர் மேல் பவுன்சர் போட்டுகிட்டே இருக்காங்க, இப்போ third umpire கிட்ட வேற விசயம் போயிருக்கு. பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.
சுரங்க ஊழலில், தோண்டத் தோண்ட ஏகப்பட்ட தலைகள் கிடைத்துள்ளன. எல்லாம் சரி, இந்த லோகயுக்தா அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பே media வில் அது கிடைக்கிறதே அது எப்படி?
லோகயுக்தா தலைவரிடம் ஒரு நிருபர் கேட்கிறார், இத்தனை chapter, இத்தனை பக்கம் கொண்ட இந்த அறிக்கையை எப்போது அரசிடம் சமர்ப்பிக்க போகிறீர்கள்? அதற்கு அவர், "நான் கையெழுத்திட்டு இன்று ஒப்படைப்பேன்" என்கிறார். நாம் இன்னும் கையெழுத்திடாத ஒரு அறிக்கையின் முழு பரிமாணமும் ஏற்கனவே எல்லோரும் அறிந்த ரகசியம் என்பதில் அவருக்கு துளியும் வருத்தமில்லை போலும். ஒருவேளை கையெழுத்திட்ட அறிக்கை leakஆனால் இன்னும் கேவலம் என்றுதான் கையெழுத்திடாதிருந்தாரோ? அவருக்கே வெளிச்சம்.
எடியூரப்பா எத்தனை முறை பாத்ரூம் உள்ளே போயி கத்தி கதறி அழுது கொண்டாரோ? பாவம் மனிதனுக்கு இப்பொ பிடித்த தமிழ் பாடல் "சோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி.." யாகத்தான் இருக்கும். முதல்வர் வேலை பார்க்க அவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம்!
பவுன்சர் மேல் பவுன்சர் போட்டுகிட்டே இருக்காங்க, இப்போ third umpire கிட்ட வேற விசயம் போயிருக்கு. பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.
சுரங்க ஊழலில், தோண்டத் தோண்ட ஏகப்பட்ட தலைகள் கிடைத்துள்ளன. எல்லாம் சரி, இந்த லோகயுக்தா அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பே media வில் அது கிடைக்கிறதே அது எப்படி?
இந்த நாட்டில் "அரச ரகசியம்" என்று ஒன்றே கிடையாதா? நாடுகள், அடுத்த நாடுகளின் ராணுவ, மற்றும் இதர அரச ரகசியங்களை அறிய ஒற்றர் படை ஒன்று அனுப்பியிருப்பார்கள். ஆனால் இந்தியாவுக்கு அது அவர்களுக்கு தேவை இல்லை? இங்கே media காரர்கள் எளிதாக அதை செய்யும்போது, ஒற்றர் படை எதற்கு?
லோகயுக்தா தலைவரிடம் ஒரு நிருபர் கேட்கிறார், இத்தனை chapter, இத்தனை பக்கம் கொண்ட இந்த அறிக்கையை எப்போது அரசிடம் சமர்ப்பிக்க போகிறீர்கள்? அதற்கு அவர், "நான் கையெழுத்திட்டு இன்று ஒப்படைப்பேன்" என்கிறார். நாம் இன்னும் கையெழுத்திடாத ஒரு அறிக்கையின் முழு பரிமாணமும் ஏற்கனவே எல்லோரும் அறிந்த ரகசியம் என்பதில் அவருக்கு துளியும் வருத்தமில்லை போலும். ஒருவேளை கையெழுத்திட்ட அறிக்கை leakஆனால் இன்னும் கேவலம் என்றுதான் கையெழுத்திடாதிருந்தாரோ? அவருக்கே வெளிச்சம்.
எல்லாம் சரி குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அரசியலை விட்டு விலகுவதாக எடியூரப்பா சொன்னார்.
எடியூரப்பா அவர்களே! இப்போ அறிக்கையில் உம்முடைய பாட்டும் குற்றமுடையதுன்னு சொல்லிருக்கிறதே, நீர் நல்லவரா? கெட்டவரா?